Sunday 8 October 2023

அபிரோஜினல் பழங்குடி மக்களின் பாடலும் பட்டை ஓவியங்களும்

 

















Museum of Contemporary Art Gallery, Sydney
05.10.2023
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்



இடம்: சிட்னி மாநகர்.
காலம்: 5.10.2023
ஒளிப்பதிவு: யசோதா.பத்மநாதன்.

ரொரொஸ் ஸ்ரெயிட் பழங்குடி மக்களின் கலைப் பொருட்கள் சில

 அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் என்ற வகைப்பாட்டுக்குள் ரொரொஸ் ஸ்ரெயிட் தீவுப் பகுதி மக்களும் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

 அவுஸ்திரேலியாவை அண்மித்திருக்கிற தீவுப் பகுதிகளில் குடியிருக்கிற இம் மக்கள் தமக்கான தனித்துவமான மொழி, கலை, கலாசார, பண்பாட்டு அடையளைங்களைக் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான சமய சம்பிருதாயங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வாழ்க்கை விழுமியங்களும் கொண்டவர்களாக விளங்கும் அவர்கள் தோற்ற அளவில் அபொரோஜினல் மக்களை விட வேறுபட்ட தோற்ற அமைப்பைக் கொண்டவர்கள். தமக்கான தனியான கொடியும் அரசமைப்பும் கொண்டவர்கள். இருந்த போதும் அவர்கள் அவுஸ்திரேலியாவின் ஆழுகைக்கு உட்பட்டவர்கள். 

அவர்களுடய கலைப்படைப்புகள் சில அவுஸ்திரேலிய Contemporary art gallery யில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. 

 சுமார் மூன்று மாத காலங்களுக்கு இலவசமாகப் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப் படைப்புகள் ஒவ்வொரு  மூன்று மாத காலங்களுக்கு ஒரு தடவையும் மாற்றமுற்று வேறு வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப் படும்.

அபிரோஜினல் மக்களின் மரப்பட்டை ஓவியங்களோடும் இந்தோனேஷிய நாட்டு துணி ஓவியங்களோடும் இணைந்த வகையில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்த காட்சிக் காசைக்கு 5.10.2023 அன்று சென்ற போது உங்கள் பார்வைக்காக எடுத்து வந்தவை இவை.

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்

எடுத்த திகதி: 5.10.2023.

இடம்: Contemporary art gallery, Sydney City.
















Wednesday 4 October 2023

காலங்களும் கோலங்களும் - ஒரு நெடு மரமும் நான்கு பருவ காலங்களும்

 





இலை உதிர் காலம் ( மார்ச், ஏப்பிரல், மே ) - ( 23.05.11)





குளிர் காலம் ( ஜூன், ஜூலை, ஓகஸ்ட் ) - ( 2023. 7.10 )





வசந்தகாலம் ( செப்ரெம்பர், ஒக்ரோபர், நவெம்பர்) ( 2023. 10.04 )

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
இடம்: Targo Road, Toongabbie, NSW 2146.

கோடை காலத்துக்குரிய காட்சி அந்தக் காலத்தை அண்மிக்கும் போது பதிவேற்றப்படும்.







Referendum - 2023 ( கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு - 2023 )

 

14.10.2023 அன்று அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிமக்களின் குரலை பாராளுமன்றத்தில் கேட்பதற்காக அவர்களுக்கான ஒர் இருக்கை கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட இருக்கிறது.

அவுஸ்திரேலிய யாப்பில் அந்த மாற்றத்தைச் செய்தாலொழிய அவர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வாய்ப்பில்லை.

அவுஸ்திரேலிய வரலாற்றில் பூர்வகுடி மக்களுக்கான இடம் என்றுமே கொடுக்கப்பட்டதில்லை. இந்த நாடு தன்னை பல்கலாசார நாடெனப் பிரகடனப் படுத்தி இருக்கிற போதும் அது தான் நிலைமையாக இருந்து வந்துகொண்டிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் பிரித்தானியர் இங்கு வந்திறங்கிய போது இந் நாடு மனிதர்கள் யாருமற்ற வெற்றிடம் என்றே பிரித்தானிய ராணிக்கு செய்தி அனுப்பப் பட்டது. அந்த அளவுக்கு இந் நாட்டில் இலட்சக்கணக்கில் குடியிருந்த மக்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்படார்கள். மேலும் தம் பாரம்பரியக் குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள்.

1967ம் ஆண்டு வரை நாட்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பில் அவர்களின் சனத்தொகை சேர்க்கப்படவில்லை. இது மேலும் அவர்களை ஒரு மனிதர்களாகவே அவுஸ்திரேலியா கணக்கெடுக்கவில்லை என்பதையே  குறிக்கிறது. எனினும் 1967ல் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 80% க்கு அதிகமானோர் அவர்களையும் மனிதர்களாகக் கணக்கெடுத்து அவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப் பட வேண்டும் என்று மக்கள் கூறியதற்கிணங்க, அவர்களைச் சேர்த்துக் கொள்ள தீர்ப்பாயம் ஆணை வழங்கியது. ( கவனிக்க: அந் நேரம் ஆழும் கட்சி மற்றும் எதிர்கட்சி இரண்டும் தன் ஆதரவை இக் கருத்துக் கணிப்புக்கு வழங்கியிருந்தது )

இன்னுமொரு விடயமும் நடந்தது. அது ஆதிக்குடி மக்களை  மனிதர்களாக ஆங்கிலேய அவுஸ்திரேலியர்கள் கணக்கெடுக்காத போதும் இங்கு குடியேறிய ஆங்கிலேய அவுஸ்திரேலிய ஆண்களுக்கு தேவையான அளவுக்குப் பெண்கள் இங்கு இல்லாதிருந்த காரணத்தால் ஆண்களின் தேவைகளுக்கு இந் நாட்டுப் பழங்குடிப் பெண்கள் பெருமளவில் இலக்கானார்கள்.

அதன் நிமித்தமாகக் கலப்பினக் குழந்தைகள் பல பிறந்தன. இந்தப் புதிய நெருக்கடியை சமாளிக்கக் கலப்பினப் பிள்ளைகளைத் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுத்து கிறீஸ்தவ மிசனறிமார்களிடம் கொடுத்து ஆங்கிலக் கல்விக்கும் மொழிக்கும் மதத்திற்கும் அவர்களை மாற்றினர். 

ஒரு பெரும் சந்ததி ஒன்று தன் வேர் தெரியாத; சொந்த பந்தங்களை அறியாத; ஆங்கிலேய அவுஸ்திரேலியர்களின் வீடுகளில் வேலை செய்யும், மந்தைகளை மேய்க்கும், மற்றும் எடுபிடிவேலைகள் செய்யும் வர்க்கமாக மாறியது.

 பெருமளவிலான உடல் உள அசெளகரிகங்களையும் வதைகளையும் கசையடிகளையும் தண்டனைகளையும் அவர்கள் ஊதியமாகப் பெற்றார்கள்.குழந்தைகள் துன்புறுத்தப்பட்டார்கள். உடலாலும் உளத்தாலும் பெருமளவில் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.  ’தொலைந்த சந்ததி’ ( Stolen generation )என்று வரலாற்றில் பேசப்படும் இந்த மக்களுக்கு செய்த அநீதிக்கு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்ற குரல் ஜோன் ஹவேர்ட் ஆட்சியில் இருந்த காலத்தில் எழுந்த போதும் அவர் அதனைச் செய்ய மறுத்து விட்டார்.

அவரின் பின்னர் ஆட்சிக்கு வந்த தொழில்கட்சியின் பிரதமர் கெவின் றட் அவர்கள் 13.2.2008 அன்று பாராளுமன்றத்தில் தன் மன்னிப்பை கோரினார்.

 இருந்த போதும் அவர்களின் குரல், தேவைகள், அபிலாசைகள் ஆகியன மறுக்கப்பட்ட , மேலும் ஒதுக்கப்பட்ட மக்களாகவே அவர்கள் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். 

அவர்கள் அரசாங்கக் கொடுப்பனவுகளை எப்படி செலவு செய்யவேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்கிறது. அவர்களுக்கான பணக்கொடுப்பனவு ரோக்கன்களாகவே வழங்கப்படுகிறது. அவர்கள் என்ன என்ன உணவுப்பொருட்களை அந்த ரோக்கன்களுக்கு வாங்கலாம் என்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கி இருக்கிறது. இந்தச் சட்டமூலமும் பாராளுமன்ரத்தின் வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் அவர்களை அவர்களின் பண்பாட்டை; வாழ்க்கை முறையை; புரிந்துணர்வோடு அறிந்து கொள்ளவோ கணக்கெடுக்கவோ போதிய முயற்சிகளை எடுக்க வில்லை. அவர்கள் ஏற்கனவே ஒதுங்கியவர்களாக; அமைதியானவர்களாக; பேசாமடந்தைகளாக; பெரும்பாண்மை சமூகத்தோடு சேராதவர்களாக; சேர விரும்பாதவர்களாக இருப்பது ஒரு காரணமே எனினும் அரசும் அரசு சார்ந்த சமூக அமைப்புகளும் அவர்களின் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் ஏற்றுக் கொண்டு, அதனை அங்கீகரித்து, அவர்களை அணுகும் தன்மையைக் கடைப்பிடிக்காது; தம் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அவர்களுக்கு கற்பித்து அவர்களைத் தம் வழிக்கு  மாற்ற முயற்சி செய்தமை / செய்கின்றமை அவர்கள் இன்னும் இன்னும் பெரும் பாண்மை சமூகத்தில் இருந்து ஒதுங்கி, விலகிப் போகவும் கசந்த மனநிலையைக் கொண்டிருக்கவும் இன்னொரு பிரதான காரணமாகும்.

பழங்குடி மக்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் பண்பாட்டையும் ஏற்றுக் கொள்ளுதலும், மதித்தலும், அங்கீகரித்தலும், கொண்டாடுதலும் இல்லாத சமூகத்தில் /தேசத்தில் அவர்கள் தொடர்ந்தும் மதிப்பிழந்தவர்களாக; பின்தள்ளப்பட்டவர்களாக; உரிமைகள் அற்றவர்களாக ஒடுக்குமுறைக்கும் இனப் பாகுபாட்டுக்கும் உட்படுபவர்களாக; சமனாக நடாத்தப் படாதவர்களாக இந்த 21ம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந் நிலையில் தான் உலுரு என்ற பழங்குடிமக்களின் புனித தெய்வீக / ஆத்மீக ஸ்தலமாக விளங்கும் உலுரு என்ற மலையடிவாரத்தில் சுமார் 250 பழங்குடி இனக்குழுக்களின் பல்வேறு விதமான தரத்தில் இருக்கும் பிரதிநிதிகள் தமக்குள் ஒன்றுகூடித் தமக்கு என்ன வேண்டும் என்ற தீர்மானத்தினை எடுத்தார்கள். அது ‘இதயத்தில் இருந்து ஒலிக்கும் உலுரு உடன்படிக்கை’  - 'uluru statement from heart' என்று வழங்கப்படுகிறது.

அது மூன்று தேவைகளை உள்ளடக்கி இருந்தது. அவை 

1.Voice

2.Treaty

3.Truth.

1. குரல்

தம் குரல் ( தேவைகள் என்ன என்பதை பாராளுமன்றத்தில் சொல்லும்) பாராளு மன்றத்தில் ஒலிக்க ஓரிருக்கை வேண்டும். கொள்கைகள், சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் இப் பழங்குடி மக்களின் பிரதிநிதிகளை கலந்து பேசி தீர்மானங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.


2.நடத்தை

அரசாங்கமும் பழங்குடி மக்களும் ஒரு உடன்படிக்கைக்கு வருமிடத்து முன் நிபந்தனையாக இந் நாட்டின் வரலாறும் பழங்குடிமக்களின் பண்பாட்டு உரிமைகளும் அவர்களுடயது என்பதைக் கணக்கிலெடுக்க வேண்டும். அவர்களது உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

3. உண்மை

உண்மையும் உண்மை வரலாறும் ஒழிவுமறைவின்றி  சொல்லப்பட வேண்டும்.

இந்த மூன்று தீர்மானங்களையும் உலுரு மலையடிவாரத்தில் கூடிய அபிரோஜினல் மக்களின் பிரதிநிதிகள் எடுத்துள்ளார்கள். இப்பிரதிநிதிகள் தொடர்ந்து இயங்கி வருவார்கள் என்ற போதும் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை இப் பிரதி நிதிகள் மாறி புதிய பிரதிநிதிகள் கூடி தம் தேவைகள் குறித்து பேசுவார்கள். இவ்வாறாக இந்த குழு தொடர்ந்து இயங்கி வரும்.

இவ்வாறாக 3 தீர்மானங்களை அவர்கள் எடுத்திருக்கின்ற போதும் முதலாவது தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பே எதிர்வரும் 14.10.2023 அன்று நடத்தப்பட இருக்கிறது.

பலவிதமான குழப்பங்களோடும் எதிர்கட்சியின் பலத்த எதிர்ப்புகளோடும் கருத்துக்கணிப்புக்கு விடப்பட்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பழங்குடிமக்களுக்கு எதனை எடுத்து வரப் போகிறது என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவுஸ்திரேலியரின் மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட இருக்கும் இந்த வாக்கெடுப்பு பலவிதங்களிலும் உலகின் பார்வைகளை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பி உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்படும் இவ் வாக்கெடுப்பு இரண்டு பிரதான அலகினைக் கொண்டிருக்கிறது.

1. மாநில அளவில் பெரும்பாண்மை வாக்குகள் எதற்குக் கிடைத்திருக்கிறது என்பது ஒன்று.

2. எல்லா மாநிலங்களிலும் சேர்த்த்டு கூடுதலாக எதற்கு கூடிய வாக்குகள் கிடைத்திருக்கிறது என்பது ஒன்று.

தனி மாநில அளவிலும் அதே நேரம் தேசிய அளவில் எந்த தீர்மானத்திற்குப் போதிய வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தான் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். 

உதாரணமாக அவுஸ்திரேலியாவில் மொத்தமாக இருக்கிற 7 மாநிலங்களில்  நியூசவுத் வேல்சில் ஆம் என்பதற்கு போதிய வாக்குகள் கிடைத்து ஏனைய மாநிலங்களில் இல்லை என்பதற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் இக்கருத்துக் கணிப்புப் பெரும்பாண்மை அடிப்படையில்  இல்லை என்பதையே இறுதித் தீர்மானமாக எடுக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம்!


மூன்று தீர்மானங்கள்

1. Voice:

A constitutionally enshrined representative mechanism to provide expert advice to parliament about laws and policies that affect Aboriginal and Torres Strait Islander peoples.

2. Treaty

A process of agreement - making between governments and First nations peoples that acknowledges the historical and contemporary cultural rights and interests of First Peoples by formally recognising soverignty, and that land was never ceded.

3. Truth

A comprehensive process to expose the full extent of injustices experienced by Aboriginal and Torres Strait Islander peoples, to enable shared understanding of Australia's colonial history and its contemporary impacts.


















இந் நாட்டு மக்கள் அவர்களுக்குரிய மதிப்போடும் மரியாதையோடும் நடாத்தப்படவேண்டும்; அவர்களுக்கான உரிமைகளும் அங்கீகாரங்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

அது குறித்து என் காட்டூனையே மேலே காண்கிறீர்கள். முதல் முதலாக என்னால் வரையப்பட்டிருக்கும் இக் காட்டூன் இயற்கையை தம் உயிரிலும் மேலாய் போற்றிப் பாதுகாத்து வரும் பழங்குடி மக்களை மரமாகவும் அது பிடித்திருக்கும் மடி அவுஸ்திரேலிய தேசமாகவும் மரத்தில் இருந்து விழும் ஆம் மற்றும் இல்லை ஆகிய கனிகளுக்காக பெட்டியில் இருந்து வெளியே வரும் அவுஸ்திரேலிய மக்களின் கைகளைக் கோரி நிற்கிறது என்பதை முதலாவது காட்டூனும்

உலுரு தீர்மானத்தைத் தலைகீழாகப் பார்த்து நிற்கும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் போக்கை கடைசியான காட்டூனும் காட்டி நிற்கிறது.

பின்னிணைப்பு:சட்டரீதியான  வாக்களிப்பு முடிவு விபரங்கள் ( 16.10.2023)