Saturday 22 June 2024

Civic Park - Pendlehill

 அவுஸ்திரேலிய சிட்னி மாநகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முக்கியமானது பெண்டில் ஹில் என்னும் சிறு நகரம். தமிழ் கடைகளும் சிற்றுண்டிச் சாலைகளும் உணவு விடுதிகளும் அழகு படுத்தும் நிலையங்களும், சிகை அலங்கரிப்பு நிலயங்களும், மலர்கடைகளும் உடுப்புக்கடைகளும் மரக்கறிக் கடைகளும் மச்ச மாமிசக் கடைகளும் பலசரக்கு கடைகளும் தொழில்நுட்ப வாணிப நிலயங்களும், ஆடை தைத்துக் கொடுக்கும் சிறுவாணிபம் என்று எல்லாமே தமிழ் பேசுவோருக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. வைத்திய நிலையங்களில் தமிழ் பேசும் வைத்தியர்கள் உள்ளனர்.

இன்று இருக்கும் சூழலில் ( 22.6.2024) மருந்தகமும் அஞ்சல் அலுவலகமும் woolworth என்று சொல்லப்படும் பெருவணிக பேரங்காடி மற்றும் வாகன திருத்துமிடம் ஆகிய இவைகள் மட்டுமே வேறு இனத்தவருக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

தமிழில் பேசி எல்லாமே செய்யக் கூடியதாக இருக்கும் இந்தப் பிராந்தியதில் வாடகைக் கார் தரிப்பு நிலையங்களும் பஸ் தரிப்பு நிலையங்களும் பேரூந்து தரிப்பு நிலையங்களும் கூட அருகருகாகவே காணப்படுகின்றன. தூரப் பகுதிகளில் இருந்து வரும் ஒருவர் இலகுவாகவே பேரூந்து மற்றும் தொடரூந்து வழியாக இந்த இடத்தை வந்தடையலாம். 

தமிழர் ஒருவர் இங்கு வருமிடத்து தனக்குத் தேவையான எல்லாவற்றையும் இங்கு வாங்கிக் கொண்டு, தமிழில் பேசி, தமிழாடைகளோடும் நடமாடித் திரியலாம்.

மகிழூந்தில் வருபவர்கள் அதனைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து சென்று தமக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் தமிழ் உணவகங்களில் உணவுண்ட பின்னர் சற்றே இளைப்பாற ஓர் அழகிய பூங்கா ஒன்று அண்மையில் 23.5.2024 அன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப் பட்டிருக்கிறது.

வரப்பிரசாதமாக அமைந்திருக்கிற இந்தப் பூங்கா 50 இலட்சம் டொலர்கள் செலவில் தற்போது புணரமைக்கப் பட்டிருக்கிறது. இருந்து பேச இடங்களும் உடற்பயிற்சி செய்ய உபகரணங்களும் குழந்தைகள் விளையாட விளையாட்டுத் திடல்களும், இளையோர் விளையாட கூடைப்பந்து, மற்றும் ரென்னிஸ் மைதானங்களும் குடும்பக் கொண்டாட்டங்களுக்கு BBQ  பகுதிகளுமாக சிறப்பாக பெண்டில்ஹில்லுக்கு ஓரழகை இந்தப் பூங்கா கொடுக்கிறது. கூடவே Hormoney பூங்காவும் நீரோடைகளும் இந்தப் பூங்காவுக்கு மேலும் சிறப்பை வழங்குகிறது.

அத்துடன் வாகன நிறுத்துமிட வசதிகளும் புத்தகங்கள் எடுத்துப் போக வைத்துப் போக என ஓரிடமும் ( community library) ( இங்கு யாரும் தம்மிடம் இருக்கும் புத்தகங்களை வைத்து விட்டுப் போகலாம். அல்லது இருக்கும் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தும் செல்லலாம். எல்லாம் இலவசம்). மேலும் ஒரு சிறப்பான வசதி என்னவென்றால் இந்தப் பூங்காவை மூன்று பிரதான வீதிகளின் வழியாகவும் வந்தடையலாம்.

1. Civic Avenue 

2.Targo Road

3.Mia Mia Street

தொடரூந்து வழியாக வருபவர்களும் பேரூந்து வழியாக வருபவர்களும் தரிபிடத்தில் இருந்து சுமார் மூன்று தொடக்கம் ஐந்து நிமிட நடை தூரத்தில் இந்த இடத்தை இலகுவாக வந்தடையலாம்.

இன்னும் புது மணம் மாறாமல் இருக்கும் இந்தப் பூங்காவை நடந்து சென்றபடி பார்க்கும் வாய்ப்பு ஒன்று எனக்கு இன்று ( 22.6.2024 சனிக்கிழமை )கிட்டியது. அதன் போது கிளிக்கிய படங்களை ஓராவணமாக இருக்கக் கருதி இங்கு இன்று பதிவேற்றுகிறேன்.

(ஒளிப்படங்கள்: யசோதா.பத்மநதன்.

திகதி: 22.06.2024)


















































































படப்பிடிப்பு: யசோதா. பத்மநாதன்.
22.06.2024. சனிக்கிழமை மழைநாள்.
குளிர்பனிக் காலம்


பின்னிணைப்பு ( 25.6.24 ) 

வள்ளுவர் சிலை திறப்புப் பற்றி வெளிவந்த பத்திரிகைச் செய்தி

ஆதாரம்: வீரகேசரி வாரமலர்; 26.05.2014, ஞாயிற்றுக் கிழமை; பக்:35. இலங்கை.