Sunday 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டு பிரசுரங்கள் - 5 -

 அரச இணைப்பினைக் கான இங்கே அழுத்தவும்

நாம் மீண்டும் வெளியே நடமாட ஆரம்பிக்கும் இவ்வேளையில், அனைத்து ஆஸ்திரேலியர்களும் கோவிட் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும்.

ஒன்று, உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்.

இரண்டு, முடிந்தவரை இடைவெளியைப் பேணுங்கள்.

 

மூன்று, COVIDSafe செயலியை பயன்படுத்துவதன் மூலம் எமது சுகாதார ஊழியர்களுக்கு உதவும் மில்லியன்கணக்கான ஆஸ்திரேலியர்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

அத்துடன் உங்களுக்கு தடிமன் அல்லது சளிக்காய்ச்சல் போன்றவற்றுக்கான அறிகுறிகளுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், வீட்டில் தங்கியிருங்கள். உங்களை சோதனைக்கு உட்படுத்துவது பற்றி மருத்துவரிடம் பேசுங்கள்.

நாம் ஒன்றாக இணைந்து இரண்டாம் கட்ட பரவல் ஏற்படும் அபாயத்தைக் குறைப்போம்.

மூன்று விடயங்களையும் செய்வோம். நம்மை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.

கன்பராவிலுள்ள தலைமை சுகாதார அதிகாரியின் அங்கீகாரம் பெற்றது.

No comments:

Post a Comment