Wednesday 20 December 2017

நீர் குவளைகள் மற்றும் நீர் தாங்கிகள் - 15 -

நீர் குவளைகள், நீர் தாங்கிகள் என்றதும் நினைவுக்கு வருவன வாளி, குடம், கூசா போன்றன. பாரம்பரிய வடிவங்கள் கொண்ட இந் நீர்தாங்கிகள் இன்று பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் பிளாஸ்டிக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு சந்தைக்கு வருவதால் உலோகங்கள் மண்பானைகள் பெற்றிருந்த இடங்கள் காலாவதியாகிப் போகின்றன.

வெளி நாடுகளிலோ எனில் வேறு வேறு வடிவங்களில் பீங்கான்களிலும் கண்ணாடிகளிலும் எண்ணிறைந்தவையாக; - தோற்றத்திலும் வண்ணங்களிலும் - பெருவாரியாக பிளாஸ்டிக்கிலும் விற்பனைக்கு வருகின்றன. எனாமல் பேணிகள் ஆங்கிலேயர் அவுஸ்திரேலிய நாட்டைக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த  18ம் 19ம் நூற்றாண்டுகளில் எனாமல் மற்றும் பீங்கான் குவளைகள் மற்றும் பாத்திரங்கள் புளக்கத்தில் இருந்தமையை இங்குள்ள மியூசியங்களில் வைக்கப்பட்டிருக்கிற காட்சிகளில் இருந்து அறிய முடிகிறது. குடித்து விட்டு எறிந்து விடும் வகையிலான பேப்பர் பிளாஸ்டிக் குவளைகள், போத்தல்கள் போன்ற பொருட்கள் இன்று பெருவாரி.

செம்பு

சில செம்புகளுக்கு சிறிதாக தாங்கி உண்டு; செம்பின் அடிப்புறம்.

வாயகன்ற செம்பு

தாங்கி இல்லாத செம்பு; அடிப்புறம்

அளவில் பெரிய; வாயொடுங்கிய செம்பும் அளவில் சிறிய; வாய் அகன்ற செம்பும்.

பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் செம்புகள்...

தூக்குச் செம்பு

தூக்குச் செம்பின் பிரிவுகள்.

தூக்குச் செம்பு; இன்னொரு ரகம்

இத் தூக்குச் செம்பின் பிரிவுகள்...

இருவகை தூக்குச் செம்பு...

’லோட்டா’ என அழைக்கப் படும் நீர் குவளை

அன்னாந்து குடிகும் மூக்குப் பேணி

மூக்குப் பேணி

குடம்

குடம் நெருங்கிய தோற்றம்

குடமே தான்...

( இக்குடம் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை உருவாக்கி வரும் பழம்பொருள் கண்காட்சியகத்தில் 16.10.2017 அன்று எடுத்தது.)

நீர் தாங்கி; சிங்கள பாணி

சிங்கள பாணி நீர் தாங்கிகள்; பல்வேறு அளவுகளில்..
மேலே உள்ள கடைசி இரண்டு ஒளிப்படங்களும் அரச கலைப்பொருள் காட்சிச் சாலையும் விற்பனை அரங்குமான கொழும்பில் உள்ள ’லக்ஸல’ என அழைக்கப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கலைப்பொருள் கூடத்தில் 5.10.2017 அன்று எடுக்கப்பட்டது. இவற்றின் கை பிடிகள் வேறு பட்டிருத்தலும் தோற்றத்தில் சற்றே ஒடுங்கி நீண்டு கால்களைக் கொண்டமைந்தவையாக அமைந்திருத்தலும் காண்க.

( 22.12.17: சிறுகுறிப்பு:
சிங்கள மக்களினது கலைப்பொருள்கள் பற்றிய பதிவொன்று என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் இன்று இடப்பட்டிருக்கிறது. காண விரும்பின் கீழே வரும் லிங்கில் சென்று காணலாம்.)

லக்ஸலா...

http://akshayapaathram.blogspot.com.au/2017/12/blog-post_22.html

நிற்க,
முன்னர்  காட்டப்பட்டிருப்பவை இந்திய இலங்கை போன்ற நாடுகளில் நாம் பாரம்பரியமாகப் பயன் படுத்தி வந்த நீர் தாங்கிகள் மற்றும் குவளைகள். செம்பு, வெள்ளி, பித்தளைபோன்ற உலோகங்களில் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்தத்தக்கதான காத்திரத்தோடும் கலை நயத்தோடும் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு தோற்றப்பாடுகளோடும் அவை அமைக்கப் பெற்றுப் பயன் படுத்தப்பட்டு வந்தன.

அதே வேளை எனாமல், செம்பு, ஈய உலோகங்களிலும் குவளைகள் செம்பு போன்றவை பாவனையில் இருந்தன. சில்வரின் பாவனை பெரு வரவேற்பைப் பெற்ற இன்னொரு உலோகமாகும். அவை ரம்லர்களாக குடங்களாக, செம்புகளாக தட்டுகளாகஎன பல்வேறு வடிவங்களில் அன்றாடப்பாவனைக்கு புழக்கத்தில் இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. டபாரா ரம்லர் என்பது தனித்துவமான தோற்றப்பாடுடய இந்தியச் சிறப்பினை கூறும் ஒரு வித குவளை வடிவமாகும்.

சாதிப்பாகுபாடுகள் நிலவிய யாழ்ப்பாண சமூக அமைப்பில் குறிப்பிட்ட சாராருக்கு தேங்காய் திருவிய சிரட்டையில் நீர் ஆகாரங்கள் கொடுக்கப்பட்டமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகைய பொருளாதாரப் பண்பாடுகள் நம் நாட்டு மக்களின் குண இயல்பை; வாழ்க்கை முறையை; பண்பாட்டை; நடத்தைகளை ஆராய்வோருக்கு சிறந்த வழிகாட்டியாகும்.

குடத்தைப் போலவே வாளி இன்னொரு வகையாக தண்ணீரைச் சேகரிக்க உதவின. கிணற்றில் தண்ணீர் அள்ளவும் நீரைச் சேகரித்து வைக்கவும் தண்ணீர் அள்ளிக் குளிக்கவும் இலகுவாக வாயகன்று இருந்ததால் அவற்றின் பாவனை தண்ணீர் குடங்களை விட பிற்காலங்களில் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றவையாக இருந்தன.


செம்பு ஜக் - தற்காலம்

செம்பு ஜக் - இன்னொரு வகை - தற்காலம்


செம்பு உலோகத்தில் தண்ணீர் போத்தல்

செம்பு உலோகக் குவளை

செம்பு உலோகக் குவளை வேறொரு வடிவம் - தற்காலம்

குவளையும் போத்தலும் - செம்பு உலோகம் -

உலோகங்களில் செம்பு உலோகம் பண்டைய தமிழர் விரும்பிய பாவனைக்கு உகந்ததென அவர்கள் அறிந்து வைத்திருந்த ஓர் உலோகமாகும். அது குறித்து ‘செம்பும் செம்பு வகைகளும்’ என்ற தலைப்பில் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்ய பாத்திரத்தில் ஏப்பிரல் 2016ல் எழுதிய பதிவொன்று இருக்கிறது. அறிய விரும்பியவர்கள்கீழ் வரும் இந்த லிங்கில் சென்று காணலாம்.

செம்பும் செம்பு வகைகளும்

http://akshayapaathram.blogspot.com.au/2016/04/4.html

பன்னீர் செம்பு குறித்து அறிய கீழ் வரும் அக்ஷ்யபாத்திரத்தில் லிங் உதவக்கூடும்...

பன்னீர் செம்பு

http://akshayapaathram.blogspot.com.au/2012/11/blog-post_21.html


அவ்வாறே பாரம்பரியமான நீர் தாங்கியான கூஜா (கூசா) என அழைக்கப்படும் ஒரு வகையான ஒடுங்கிய நீண்ட வாயையும் அகன்ற குடம் போன்ற அடிப்பகுதியையும் கொண்ட ஒரு வகைப் பாரம்பரிய நீர் தாங்கி பற்றி என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 13.11. 2012 அன்று ஒரு பதிவு இட்டிருந்தேன். ஆர்வமுள்ளவர்கள் கீழ் வரும் அந்த லிங்கில் சென்று விபரங்களைக் காணலாம்.

கூசா

http://akshayapaathram.blogspot.com.au/2012/11/blog-post.html


பீங்கான் கோப்பைகள், கேத்தில்...

கலை நயம்....

அழகியலும் கற்பனையும் இணைந்த தோற்றம்....

கேத்திலின் மறுவளம்...

பீங்கான் கோப்பை குடும்பமாக....

பீங்கான்களின் பாதுகாப்பு....

மேலே காட்டப் பட்டிருப்பது மேலைத் தேயத்தவரின் பீங்கான்களில் அவர்கள் பாவிக்கும் நீர் தாங்கிகள் மற்றும் குவளைகளின் ஒரு மாதிரி வடிவம். கிளாஸ் பீங்கான், எனாமல் மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட முடிவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். நம்மிடையையும் பிற்காலங்களில் இவை மிகப் பரவலாக புளக்கத்தில் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. தேநீர் கோப்பி முதலானவைகளை அவர்கள் இதில் அருந்தினர். அவற்றை மிகுந்த கலை நயத்தோடு ஆக்கி அவற்றில் அவர்கள் தேநீரோ கோப்பியோ அருந்தும் செயல் கலை அழகியலோடு கூடியது.

தேநீர்,கோப்பி முதலானவைகள் கேத்தலிலும் சீனி, பால் மற்றும் கலக்கும் கரண்டி முதலானவைகள் தனித்தனியாகவும், அவற்றின் வெளித்தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கவர்ச்சிகரமாகவும் விளங்கும் இந்தக் கூட்டை ஒரு தட்டில் ஏந்தி வந்து உரையாடிய படியே அவரவர் தம் ருசி வேறுபாடுகளுக்கேற்ப கலந்து அருந்துவது அவர் தம் பண்பாடு ஆகும்.

நம்முடய பண்பாட்டில் இருந்து வேறுபட்டு தனிச் சிறப்பான தனித்துவங்களை எடுத்துக் காட்டி நிற்கும் இப்பாண்பாட்டு அம்சங்களை விரிக்கப் புகின் அது வேறொரு இடம் நோக்கி நம்மை நகர்த்தி விடும் என்ற பயம் காரணமாக இத்தோடு இதனை நிறுத்திக் கொள்ளுகிறேன்.

வாளி, டபாரா ரம்லர், வெள்ளி மற்றும் சில்வர் குடங்கள் மற்றும் தற்கால பாவனையில் இருந்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் மட்டைகளில் வரும் நீர் தாங்கிகள், குவளைகள் இங்கு இடம் பெறவில்லை. அவைகள் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் பொருள்களாகவும் இருக்கும் என்பது என் அனுமானம்....

விரும்புகிறவர்கள் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 2012 செப்ரெம்பரில் பதிவிட்ட மேலைத்தேயத்தவரின் பீங்கான் குவளைகளின் அழகியல் குறித்த மேலதிக படங்களைக் கீழே வரும் லிங்கில் சென்று காணலாம்.
http://akshayapaathram.blogspot.com.au/search?q=little+bit+of+luxury


No comments:

Post a Comment