Sunday 30 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 5 -

 சைப்பிரஸ்

மெடிட்டிறேனியன் கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவு சைப்பிரஸ் ஆகும். இது மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும்.


 1974ம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரினார்கள். அதற்குக் காரணம் துருக்கி வடக்கு சைப்பிரஸைக் கைப்பற்றிக் கொண்டது ஆகும். அதன் காரணமாக சைப்பிரஸ் மக்கள் நாடற்றவர்கள் ஆனார்கள். அவர்கள் வேறு நாடுகளுக்குப் போனதைப் போல அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

செக்கோசிலோவேக்கியா


செக்கோசிலோவேக்கியா மத்திய ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது. அதன் அண்டை நாடுகளாக ஒஸ்ரியா, ஜேர்மனி, போலந்து, சோவியத் யூனியன், உக்ரேனியன், ருமேனியா, ஹங்கேரி ஆகியன விளங்குகின்றன. 

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியால் செல்வாக்குச் செலுத்தப்பட்ட நாடாக இது இருந்து வந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. அதனால் பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.  இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போது அவுஸ்திரேலியா சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான  யூகோசிலோவாக்கிய புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொண்டது.

 1993ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இந் நாடு செக் குடியரசாகவும் ஸ்லோவோக் குடியரசாகவும் இரண்டு தனி நாடுகளாகப் பிரிந்தன.

கிழக்கு தீமோர்:


வடமேற்கு அவுஸ்திரேலியா வில் டார்வின் நகருக்கு 400 மைல் தொலைவில் அமைந்திருக்கும் தீவு தீமோர் ஆகும். மானம், தாயகம் மற்றும் மக்கள் என்பதை இந் நாடு தன் நாட்டுக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

1975ம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்து அம் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அதன் அண்டை நாடான இந்தோனேஷியா கிழக்கு தீமோரை ஆக்கிரமித்திருந்ததாகும்.அப்போதில் இருந்து தீமோர் மக்கள் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தார்கள். அதனால் உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைந்தன. 

1975ம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 2500 கிழக்கு தீமோர் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரினார்கள். கிழக்கு தீமோர் என்ற இந் நாடு போத்துக் கேயரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த காரணத்தால் பலர் பின்னர் போர்த்துக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பலர் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும் வந்து குடியேறினார்கள்.

 இந்தோனேஷியா 1999ல் நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து 2002.ம் ஆண்டு மே மாதம் 20 ம் திகதி கிழக்கு தீமோர் தனிநாடானது.21ம் நூற்றாண்டில் தனிநாடான பெருமை கிழக்கு தீமோருக்கு உண்டு. 

(தொடரும்)


No comments:

Post a Comment