Sunday 30 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 6 -


 ஜேர்மனி:

மத்திய ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது ஜேர்மனி.

 ஒற்றுமை, நீதி மற்றும் விடுதலை ஆகியவற்றைத் தம் தாயகக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஜேர்மனி, நீண்ட இன அழிப்புக்குரிய போர் வரலாற்றையும் பொருளாதாரச் செழிப்பையும் கொண்டது. 

1800களின் நடுப்பகுதியில் இருந்து ஜேர்மனியர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புகலிடக் கோரிக்கையாளர்களாக வந்துள்ளார்கள். அவர்களின் வருகை அவுஸ்திரேலியா பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கிய தறுவாயில் நிகழ்ந்தது. 

1800 - 1850கள் தொடங்கி ஜேர்மனி அமைதியற்ற நாடாக விளங்கியது. அதற்குக் காரணம் சமயமாகும். ஆரம்பகாலத்தில் இருந்தே ஜேர்மனியின் பண்பைத் தீர்மானிப்பதில் ரோமன் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்கள் முக்கிய இடத்தை வகித்து வந்தன. 1517ல் மாட்டின் லூதர் தனது 95 வாசகங்கள் அடங்கிய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்ததன் வழியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்து புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்து வைத்தார். அதன் விளைவாக 1530ல் லுத்தேர்ன் திருச் சபை பல ஜேர்மனியப் பகுதியில் உத்தியோகபூர்வமான சமயமாக உருவானது. 

இதன் காரணமாக சமயமுரண்பாடுகள் ஏற்பட்டு 30 ஆண்டுப் போர் 1618 - 1648 வரை நடந்தேறியது. இப் போரினால் ஜேர்மனியின் சனத்தொகை 30% தால் குறைவடைந்தது என்று சொல்லப்படுகிறது. 

மார்ட்டின் லூர்து தேவாலயம் - ஜேர்மனி
தாம் சார்ந்த லுர்த்தேன் சமயக் கொள்கையை அனுசரிக்க முடியாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய ஜேர்மனிய மக்கள்  அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர். 

அவர்கள் தென் அவுஸ்திரேலியப் பிராந்தியங்களைப் பெரிதும் விரும்பினார்கள். அங்கு வைன் உற்பத்தியை செய்யும் வாய்ப்பு அங்கு அதிகம் காணப்பட்டதும் அதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

 அத்துடன் ஜேர்மனிய மக்களுக்கு லுர்த்தேர்ன் தேவாலயம் அவர்களின் உணர்வுகளோடும் வாழ்வோடும் பண்பாட்டோடும் வரலாறோடும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். அதனால் லுர்த்தேர்ன் தேவாலயங்களையும் ( Lutheran Churhes ) அங்கு அவர்கள் கட்டித் தம் பண்பாட்டின் பலமான அடித்தளத்தை அங்கு இட்டனர்.

’City of Church’ என்று இன்றும் அழைக்கப்படும் தென் அவுஸ்திரேலிய மாநிலத்தில் அவர்களின் பல தேவாலயங்களை இன்றும் அங்கு காணலாம். அத்துடன் உலகப் பிரசித்தி பெற்ற அவுஸ்திரேலிய வைன் உற்பத்திக்குப் பெயர் போன இடமாக இன்றும் தென் அவுஸ்திரேலிய மாநிலம் பிரபலம் பெற்றுக் காணப்படுவதற்கும் இவ்வாறு இந் நாட்டுக்கு வந்து சேர்ந்த ஜேர்மனிய பின்புலம் கொண்டவர்களே காரணமாகும்.

தென் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு வைன் உற்பத்தி தோட்டம்


ஹெங்கேரி:

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஹங்கேரி. 

வடக்கே சிலோவேக்கியாவும் கிழக்கே உக்ரேனியன் மற்றும் ருமேனியாவும் தெற்கே சேர்பியா மற்றும் குரோஷியாவும் தென் மேற்கே சுலோவேனியாவும் மேற்கே ஒஸ்ரியாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ள நிலம் சூழ்ந்த நாடு ஹங்கேரி.

1840களில் இருந்து அவர்களின் வருகை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.முதலாம் உலகப் போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதும் 1956ல் சோவியத்தின் படையெடுப்புக் காரணமாகவும் இந்தப் புலப் பெயர்வுகள் நடைபெற்றன.

முதலாம் உலகப் போரின் போது ஹங்கேரி தனது நிலப்பகுதியில் 71% தினையும் 58%மான மக்கல் தொகையையும் 32% மான ஹங்கேரிய இனக்குடிகளையும் இழந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஹங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டதன் விளைவாக மேலும் அது தனது பலத்தையும் மக்களையும் இழந்தது. போரின் முடிவில் அது சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கின் கீழ் வந்து சேர்ந்தது.

இவ்வாறாகப் உலகப் பெரும் போர்களைச் சந்தித்ததன் விளைவாக சிறந்த அமைதியான பொருளாதார சுபீட்சமுள்ள வாழ்க்கை ஒன்றைக் கருதி ஏனைய மத்திய ஐரோப்பிய மக்களைப் போன்று ஹங்கேரிய மக்களும் புகலிடம் தேடி ஏனைய நாடுகளுக்குப் போனதைப் போல அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

1956ல் சோவியத் யூனியன் ஹங்கேரியைக் கையகப் படுத்தியதையடுத்து அங்கு 40 ஆண்டுகள் கம்யூனிச ஆட்சி நடந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் ஐக்கியநாடுகள் சபையின் வழியாக ஏற்படுத்தப்பட்ட அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ஹங்கேரிய மக்கள் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினூடாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இத்தாலி

இத்தாலி ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது.

இது மத்தியதரைக் கடல் பகுதிக்குள் தீபகற்பமாக அமைந்திருக்கிறது. இத்தாலிக்கு வடக்கு எல்லையாக பிரான்ஸ், சுவிற்சிலாந்து,ஒஸ்ரியா, சில்வேனியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. ஏனைய பகுதிகளைக் கடல் சூழ்ந்துள்ளது. சிசிலி மற்றும் சார்னியா தீவுகள் இத்தாலிக்குச் சொந்தமானவை. அதே நேரம் இத்தாலிக்குள் சென் மெரீனா மற்றும் வத்திக்கான் ஆகிய இரு நாடுகள் அமைந்துள்ளன.

1881லும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 1945க்குப் பிற்பட்ட காலப் பகுதியிலும் அவுஸ்திரேலியாவை நோக்கியதான இத்தாலியர்களுடய புலப் பெயர்வுகள் நடைபெற்றன.

1880ல் குறிப்பிட்ட இத்தாலியக் குழு ஒன்று பப்புவானியூகினியில் உள்ள அழகிய நகரொன்றில் குடியேறலாம் என்ற  அறிவித்தலை நம்பி பெருந்தொகைப் பணத்தினை Marruis De Rays க்குக் கொடுத்து அங்கு சென்றது. அவர்கள் அங்கு போனதன் பிறகு தான் அது ஒரு மிகப்பெரும் மோசடி என்பது தெரிய வந்தது.  அவர்கள் அங்கு பரிதவித்து நின்ற போது அவுஸ்திரேலியாவில் அப்போதிருந்த காலணித்துவ நாடுகளின் கூட்டமைப்பின் தந்தை என்று கருதப் படும்; நியூசவுத் வேல்ஸின் முதல்வராக தொடர்ந்து 5 தடவைகள் இருந்த; Sir.Henry Parkes அதனை அறிந்து, ஒரு கப்பலை அங்கு அனுப்பி, அவர்களை நியூசவுத் வேல்ஸ் மாகாணத்துக்கு அழைப்பித்து, அங்கு அவர்களைக்  குடியேற்றினார்.

அவர்கள் இங்கு 1881 இல் இங்கு வந்து புதிய இத்தாலி என்றொரு பகுதியை வடக்கு நியூசவுத்வேல்ஸில் உருவாக்கினார்கள்.

அதன் பிற்பாடு இரண்டாம் உலகப் போர் 1945ல் முடிந்த பிறகு ஏனைய ஐரோப்பிய குடியேற்ற வாசிகளோடு இத்தாலியர்களும் பெருமளவில் வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறினார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment